சேலம், செப்.14- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத் தையே அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு சனியன்று சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்க கொடியை ஏற்றி வைத்து மாநி லத் தலைவர் நெ.இல.சீதரன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலை வர் சி.முருகப்பெருமாள் வரவேற்று உரையாற்றினார். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் ந.ஜெயச்சந்திரன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்து பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் (பொறுப்பு) ஆ.செல்வம் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், சர்வதேச முதி யோர் தினமாக அக்டோபர் 1ஆம் தேதி யை அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்களை பழி வாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாளன்று ஊழியர்களை தற்கா லிக பணிநீக்கம் மற்றும் 17பி- யை பயன்படுத்துவது போன்ற நடவ டிக்கைகளை அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங் குவதுபோல் மாநில அரசு ஊழி யர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சங்கத்தின் மாநில தலைவராக நெ.இல.சீதரன், மாநில பொதுச் செயலாளராக பி.கிருஷ்ண மூர்த்தி, மாநில பொருளாளராக என். ஜெயச்சந்திரன், மாநில துணை தலை வர்களாக எஸ்.சந்திரன், கே.இள மாறன், பி. சுகுமாரன், ஜி.சுந்தர மூர்த்தி, எம்.சுப்பிரமணியன், பா. இராமமூர்த்தி, டி.குப்பன், மாநில செய லாளர்களாக எம்.முருகேசன், குரு. சந்திரசேகரன், ஏ.பக்கிரிசாமி, பி.ஜீவா னந்தன், எஸ். ஆறுமுகம், எம்.நாதன், ஆர்.மனோகரன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.
அக்டோபர் 1 போராட்டம்
மாநாட்டையொட்டி தலைவர்கள் அளித்த பேட்டியில், மாநாட்டு தீர்மா னங்களை வலியுறுத்தி அக்டோபர் 1 அன்று தமிழகம் முழுவதும் வட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.